டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அட்டவணை ஜனவரியில் வெளியீடு
குரூப் 1, குரூப் 2 உட்பட அரசு பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும்
அரசு பணியிடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடப் படும்.
அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியானது. அதில்
ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அரசு துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான
அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதத்திலும், ஒருங்கிணைக்கப்பட்ட
குரூப் 2 தேர்வு அறிவிப்பு மே மாதத்திலும் வெளியாக உள்ளது. இதேபோல், குரூப்
4 பதவிகளுக்கான அறி விப்பு செப்டம்பர் மாதம் வெளி யாக உள்ளது.
மேலும், குரூப் 3, குரூப் 6, குரூப் 7 மற்றும் குரூப் 8 பதவிகளில் அடங்கிய
பணியிடங்களுக்கான அறிவிப்புகளின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர
பொறியாளர் பணிகள் உட்பட 23 பிரிவுகளுக்கான தேர்வு விவ ரங்களும்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
Comments
Post a Comment