பா.ஜ.க.,வில் ராதாரவி.. சின்மயி காட்டம்.. செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி?
சென்னை: நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி, தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்த நிலையில், மேடைகளில் பெண்களை அவமதிக்கும் விதமாகவும் ஆபாசமகாவும் ராதாரவி பேசி வருகிறார் என்றும், அவர் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுக்கி ஸ்மிரிதி இரானியிடம் இவரை ஏன் பா.ஜ.க.,வில் சேர்த்துள்ளீர்கள் என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். மீடு விவகாரத்தில் இருந்தே ராதாரவியை விமர்சித்து வரும் சின்மயி, தற்போது ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்துள்ள நிலையில், மீண்டும் விமர்சித்துள்ளார்.
Comments
Post a Comment