நிர்பயா குற்றவாளி மறு ஆய்வு மனு மீது உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதிசெய்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி குற்றவாளி அக்ஷய் குமார் சிங் அளித்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு மீதான விசாரணையை 3 பேர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரிக்க உள்ளது.
Comments
Post a Comment