கிருஷ்ணகிரி-பனி சரிவில் இறந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி ஊராட்சி கும்மனூர் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் சந்தோஷ் த.பெ. நராஜன் (வயது.23) மெட்ராஸ் என்ஜீனிரிங் குருப் - சாப்பர் கிரேடு பிரிவில் பணியாற்றி, அருணாசலம் பிரதேசம் ரியாண்டு மலை பகுதியில் பணியின் போது பனி சரிவில் வாகன விபத்து ஏற்பட்டு இறந்த இராணுவ வீரரின் உடலுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சு.பிரபாகர் இ.ஆ.ப. அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
Comments
Post a Comment