நாக்பூர் மேயர் மீது துப்பாக்கிச்சூடு
நாக்பூர் மேயர் சந்தீப் ஜோஷி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது காரில் பயணித்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், சந்தீப் ஜோஷியை நோக்கி மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டது.
இந்த கொலைவெறித் தாக்குதலில் இருந்து நாக்பூர் மேயர் சந்தீப் ஜோஷி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment